புதுடில்லி :''இந்திய பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை பிரபலப்படுத்த, இளம் எழுத்தாளர்கள் அடங்கிய குழுவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:மாணவர்களின் சிந்தனை மற்றும் கற்பனைத்திறன்களை ஊக்குவித்தல், மாணவர்களிடம் தலைமை பண்பை உருவாக்குதல் ஆகியவற்றை லட்சியமாக வைத்துத் தான், புதிய தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
Topics